ஆயுர்வேத மசாஜ் நிலையம் – விடுதியில் வசமாக சிக்கிய பெண்கள்!

கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியை கல்கிஸ்சை பொலிஸார் நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.

கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் விடுதியை நடத்தி வந்த குற்றச்சாட்டில் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

22, 25 மற்றும் 29 வயதான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் வத்துராவ, கடுகஸ்தோட்டை மற்றும் வல்பிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *