
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:
போலித் தேசியம் பேசிக்கொண்டு ஐ.நாவுக்கு போகின்றோம் என்ற பெயரில் பலர் இங்கே வெளிநாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர்.இது போதாது என்று மோடிக்கும் கடிதம் எழுகின்றனர்.இவர்களின் நாடகம் எல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும் தான்.
ஆகவே தான் நேற்று என்பது உடைந்த பானை,நாளை என்பது மதில் மேல் பூனை,இன்று என்பது மட்டுமே கையில் உள்ள வீணை.ஆகவே மக்களுக்கு சேவை செய்வோரின் பக்கமே நாம் உள்ளோம்.அந்த திருத்தம் இந்தத் திருத்தும் என்று இவர்கள் மாறி மாறி பேசுவார்கள் .நாம் எப்போதும் ஒரே திசையில் தான் பயணிப்போம்.எம்மை மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.
பிறசெய்திகள்