மின்கட்டணத்தை பேணுவது தொடர்பில் விசேட ஆலோசனை!

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் உற்பத்தி துறையை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கவும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், நிலையான மின் கட்டணத்தை பேணுவது தொடர்பில் தேசிய சபையின் உபக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதாவது, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை இனங்காண்பது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், மின்சார தேவை தொடர்பில் அதிக கேள்வி காணப்படும் நேரத்திற்கும் குறைந்த கேள்வி காணப்படும் நேரத்திற்கும் இடையில் அமைகின்ற இடைவெளியை குறைக்க வேண்டும் என உபக்குழுவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எரிசக்தி தேவைகளை நிறைவு செய்வதற்கு மாற்று திட்டங்களை முன்வைத்து ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் போக்குவரத்து துறையை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டிகளுக்கு 87 ஒக்டேன் ரக எரிபொருளை பயன்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *