
சில்லறை விற்பனை அளவுகள் கடந்த மாதம் 1.4 சதவீத சரிவைக் கண்டுள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இருந்து சில்லறை விற்பனை சரிவை நோக்கி நகர்வதாக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.
புதிய தரவுகள் அரசாங்கம் கடன் வாங்குகிறது மற்றும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பை விட குறைவாக பொருட்களை கொள்வனவு செய்வதை எடுத்துரைக்கின்றது.
அரசாங்கக் கடன் பெறுவது செப்டம்பரில் இரண்டாவது மிக உயர்ந்த பதிவாகும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.
பொருளாதார புள்ளியியல் இயக்குனர் டேரன் மோர்கன் கூறுகையில், ராணியின் இறுதிச் சடங்கிற்காக பல கடைகள் மூடப்பட்டிருந்ததால், செப்டம்பரில் வீழ்ச்சி ஏற்பட்டதாக சில்லறை விற்பனையாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர்’ என கூறினார்.
சில்லறை விற்பனையின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் வீழ்ச்சி காணப்படுவதாகவும், உணவுக் கடைகளில் விற்பனை வீழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.