மூத்த இலக்கிய படைப்பாளியை இழந்தது இலங்கை மண்!

மலையக மண்ணின் மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் இன்று இறையடி எய்தினார்.

சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தனது 88வது வயதில் இறையடி எய்தியதாக அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.

ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராவார்.

இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *