இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்திற்கு சுமார் 230 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் த ஹலோ டிரஸ்ட் நிறுவனத்தின் திட்ட மேலாளர் ஸ்டீபன் ஹோல் ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.
த ஹலோ டிரஸ்ட் நிறுவனம், 2002இல் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், ஜப்பானிய உதவியின் மூலம் ஏறத்தாழ 20% அனுமதி நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் பெரும் நன்கொடை அளித்துள்ளதுடன், தற்போது இலங்கையில் இயங்கி வரும் நிலக்கண்ணிவெடி அகற்றும் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் உதவுகின்றது.
இதற்காக 42.7 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.
வடக்கில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான இருபது வருட மனிதாபிமான உதவியின் விளைவாக சுமார் ஏழு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் இருந்து 54 ஆயிரம் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக த ஹலோ டிரஸ்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிறசெய்திகள்