ரொஷான் மஹாநாம தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹநாம தனியார் வங்கி ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கினை எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

வர்த்தக நடவடிக்கை ஒன்றின் போது தனியார் வங்கி ஒன்றில் தாம் மேற்கொண்டிருந்த பிணை வைப்பு தொகையை மீண்டும் கோரிய போது அதனை வழங்குவதற்கு தனியார் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வங்கி மறுப்பு தெரிவித்தமையை எதிர்த்து ரொஷான் மஹாநாம வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

வங்கியின் நடவடிக்கை காரணமாக தமக்கு இரண்டரை இலட்சம் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுத்தாரரான ரொஷான் மஹாநாமா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *