
நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 80% வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமணி குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் கென்யோன், காசல்ரீ, விக்டோரியா, ரந்தெனிகல, ரன்டெம்பே, லக்சபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 80% வரை அதிகரித்துள்ளது.
இந்நாட்களில் 60% நீர் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது.
எஞ்சிய பகுதி அனல் மற்றும் காற்றலை ஊடாக இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்தது.