வேடிக்கையான மனிதர்கள் நிறைந்த இலங்கைப் பாராளுமன்றம்- சபையில் அநுர கருத்து!

நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று, அரசியலமைப்பின் 22ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து,அதே திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்கள் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர் எனவும் அவர் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் இதுவரை திருத்தம் செய்யப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் எவ்வித வேறுபாடுமின்றி ஆதரவாக வாக்களித்தவர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதே திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்கள் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகள் தற்போது 22ஆவது திருத்தமே இறுதித் தீர்வு என புகழ் பாடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாத்து ,தமிழ் ,முஸ்லிம்,சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *