தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலான மீலாதுன் நபி விழா!

கல்வி அமைச்சின் வழிகாட்டலில்தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலான மீலாதுன் நபி விழா கொண்டாட்டம் நாடு முழுவதிலுமுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதற்கு அமைவாக மட்டக்களப்பு செம்மண்ணோடை அல்- ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர்
எம்.எல்.அன்ஸார் தலைமையில் மீலாதுன் நபி விழா தேசிய தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் போது பலதரப்பட்ட இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமூக ஒற்றுமை,சகோதரத்துவ உறவை மேம்படுத்துதல் போன்ற நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நற் போதனைகளை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன்
பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந்த மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட போட்டி மற்றும் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன் போது பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள்,ஆன்மீகத் தலைவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *