தேர்தலில் போட்டியிட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் தடை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தேர்தலில் போட்டியிட, ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தில் இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பெற்ற பரிசுகள் குறித்து அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

பரிசுகளில் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், ஒரு மோதிரம் மற்றும் ஒரு ஜோடி சுற்றுப்பட்டை இணைப்புகள் ஆகியவை அடங்கும்.

வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவு, ஏப்ரல் மாதம் கான் வெளியேற்றப்படுவதற்கு முன்பே தொடங்கிய அரசியல் சண்டையின் மற்றொரு திருப்பமாகும்.

மேலும், இது முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரமும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியும் நடத்திய பல சட்டப் போராட்டங்களில் ஒன்றாகும்.

தேர்தல் ஆணையத்தின் 5 பேர் கொண்ட குழுவின் ஏகோபித்த முடிவு, முன்னாள் பிரதமருக்கு பெரும் பின்னடைவு என கூறப்படுகின்றது.

அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான கோஹர் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *