பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப் பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன்

நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். நாட்டில் அனைத்து இனத்தவரும் சமமாக மதிக்கப் பட வேண்டும் என முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் புணர்வாழ்வு அமைச்சர் DM சுவாமிநாதன் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்த பின், நாட்டில் தமிழர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தாலும், பயங்கரவாத தடைச் சட்டம் நிம்மதியாக மக்களை இருக்கவிடவில்லை.ஆகவே அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப் படுத்தப்பட வேண்டும்.இதன் மூலம் மக்கள் இடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எதிர்பார்க்காலம்.

இல்லை என்றால் இப்பிரச்சினை தொடர்ந்த வண்ணம் காணப்படும். தமிழர்களின் விருப்பங்களை புரிந்து கொள்ள வேண்டும்.எனவே அரசு கரிசனைவுடன் நடந்து யதார்த்ததை புரிந்து செயற்பட வேண்டும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *