ரணில் அரசுக்கு காலக்கெடு கொடுத்த சிங்கள எம்.பி

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்தாலும் இலங்கையில் குறைந்த பாடில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

உலகில் எப்பாகத்தில் எரி பொருள் விலை குறைந்தாலும் இலங்கையில் குறையாது. மக்கள் தலையில்தான் சுமை. இந்த அரசாங்கம் புதுமையான அரசாங்கம். மின் சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம், மக்கள் மீது வரி, ஒரு இலட்சம் ஊதியம் பெறும் நபருக்கும் வரி, கட்டிட ஒப்பந்த காரர்களுக்கு கொடுக்க நிதி இல்லை, அரச ஊழியர்களுக்கு நிதி இல்லை , டொலர் இல்லை.

இது தான் ரணில் அரசின் வேலை. ரணில் அரசால் ஒன்றும் செய்ய முடியாது.இது தவிர உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது ஒரு புறம். எந்த நாட்டில் கடன் பெறலாம் என்பது மறு புறம்.

இப்படியான நிலைமைகளில் மக்கள் தான் துன்பமடைக்கின்றார்கள். நாட்டை ஏமாற்றும் அரசாங்கம் மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்தவில்லை என்றால் மற்றுமொரு “அரகல” போராட்டம் மக்கள் புரட்சிதான் எற்படும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *