முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு மகஜர்!

யாழ். மக்கள் பணிமனையின் தலைவரும் முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினரான B.A.S சுப்யானும், அமைப்பாளர் ஏசி கலீலல் ஹாஜி அவர்களும், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை சந்தித்து முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்ததுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் (19)  இடம்பெற்றது. 

தற்போது முஸ்லிம் மக்களின் நிலை, பிரச்சனைகளாக, தேவைகளாக இருக்கும் காணி இல்லாதவர்களுக்கு காணியும் வீடும், காணி இருந்தும் வீட்டு திட்டம் கிடைக்காதவர்கள் கல்வி மேம்பாடு, தொழிற்பெயர்ச்சி, ஊடாக சுய தொழில், வாய்ப்புகள் கட்டுமானம், வாழ்வாதார திட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வடமாகாண காணி ஆணையாளர் திரு சோதிநாதன்,  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ். பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் மற்றும் யாழ்ப்பாண கல்வி வலய பணிப்பாளர் எம். இராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் சுப்யான் முஸ்லிம்களின் பிரச்சினைகள் எவ்வாறு இழுத்தடிக்கப்படுகின்றது என்பதை தெளிவுபடுத்தியதுடன் இனிமேலும் இவ்வாறு நிகழாமல் இப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *