13ம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தி! – சரத் வீரசேகர

13ம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தி! – சரத் வீரசேகர

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையை வடக்கு கிழக்கு மக்கள், கடைப்பிடிப்பதில்லை. இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் .

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டம் எமக்கு இந்தியாவினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நிறுத்தி வைத்து, பாதுகாப்பாக அவர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்து, அவர்களிடம் இராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்டே 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றினர்.

பெரிய நாடுகளில் கையாள வேண்டிய பொறிமுறைகளை இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு திணிக்க முடியாது. நாம் சமஸ்டி நாடாக இருக்க முடியாது.

13 ஆம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தியைப்போன்றது. எனவே 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பே இதற்கு தீர்வாகும். அதற்காகவே கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு மக்கள் ஆணையும் கிடைத்தது. மேலும் 22ஆம் திருத்த சட்டத்துக்கு நான் இணங்க மாட்டேன், இது மக்களின் ஆணைக்குழு முரணானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையை வடக்கு கிழக்கு மக்கள், கடைப்பிடிப்பதில்லை. இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் .

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டம் எமக்கு இந்தியாவினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நிறுத்தி வைத்து, பாதுகாப்பாக அவர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்து, அவர்களிடம் இராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்டே 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றினர்.

பெரிய நாடுகளில் கையாள வேண்டிய பொறிமுறைகளை இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு திணிக்க முடியாது. நாம் சமஸ்டி நாடாக இருக்க முடியாது.

13 ஆம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தியைப்போன்றது. எனவே 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பே இதற்கு தீர்வாகும். அதற்காகவே கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு மக்கள் ஆணையும் கிடைத்தது. மேலும் 22ஆம் திருத்த சட்டத்துக்கு நான் இணங்க மாட்டேன், இது மக்களின் ஆணைக்குழு முரணானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *