
கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவித்தல்
2022 ஒக்டோபர் 9 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை நியாயமற்ற முறையில் தடுத்ததாகவும், அதற்கு இடையூறு விளைவித்ததாகவும் தொடரப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் நளின் தில்ருக் ஆகியோரை, நவம்பர் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்தல் விடுத்துள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின்படி, குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்படி இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடத்தையைக் கண்டித்து சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் குழுவொன்று அமைதிப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
சட்டத்திற்கு அமைய இந்த எதிர்ப்பு தொடர்பில் கோட்டை காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அது தொடர்பான தகவல் காவல்துறை மா அதிபருக்கும் அனுப்பப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
2022 ஒக்டோபர் 9 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை நியாயமற்ற முறையில் தடுத்ததாகவும், அதற்கு இடையூறு விளைவித்ததாகவும் தொடரப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் நளின் தில்ருக் ஆகியோரை, நவம்பர் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்தல் விடுத்துள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின்படி, குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்படி இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடத்தையைக் கண்டித்து சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் குழுவொன்று அமைதிப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
சட்டத்திற்கு அமைய இந்த எதிர்ப்பு தொடர்பில் கோட்டை காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அது தொடர்பான தகவல் காவல்துறை மா அதிபருக்கும் அனுப்பப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.