முல்லைத்தீவு மாவட்டத்தில் கலை இலக்கிய விழா ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று இடம் பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட 2022 ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் ,ஒட்டுசுட்டான் பிரதான சந்தியில் இருந்து பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் ஊர்தி பவனி இடம்பெற்றது.

விருந்தினர்கள்,கலைஞர்கள் அழைத்து வரப்பட்டு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதான மேடையில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

மாவட்ட ரீதியாக சிறந்த கலைஞர்கள் இதன்போது மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வடமாகாண பண்பாட்டு கலாசார பணிப்பாளர் ராஜ மல்லிகை,முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், துணுக்காய், முல்லைத்தீவு கல்வி வலய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், மாணவர்கள்,கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பிறசெய்திகள்