வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றை வழிமறித்துத் தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேருந்தில் இருந்து இறங்கியோரே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளனர் என தனியார் பேருந்தில் இருந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தாக்குதல் முயற்சியை மேற்கொண்டவர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் என்றும் அவர்களின் குறித்த அநாகரிகச் செயல் அச்சத்தை உருவாக்கியது எனவும் குறித்து தனியார் பேருந்தில் இருந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.