தாயையும் மகனையும் காவு வாங்கிய விபத்து!

முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

42 வயதுடை தாய் மற்றும் அவரது 18 வயதுடைய மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்து பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *