தொடரும் நெருக்கடி நிலையிலும் சாதனை படைத்த இ.போ.ச!

இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் 2021ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு இரட்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்து அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணஹங்ச,

எரிபொருள் விலை அதிகரிப்புடன், பேருந்துக் கட்டணங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டது.

எனினும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து மக்கள் பொதுப் போக்குவரத்தினை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில், இந்த வருடம் இரட்டிப்பு வருவாயைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *