இனப்பிரச்சினைக்குத் தீர்வாக எந்த திருத்தங்களும் அமையவில்லை – கோவிந்தன் கருணாகரம்

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள 20 திருத்தங்களும் தீர்வாக அமையவில்லை என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

22வது திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

13 வது திருத்தச் சட்டத்தினை இனப்பிரச்சினை தீர்வின் தொடக்கப் புள்ளியாக வைத்து முன்நோக்கி செல்ல வேண்டும் என்றும் கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுவரை கொண்டுவரப்பட்ட திருத்தங்களினால் நாட்டில் இனங்களிடையே, மதங்களிடையே மொழிகளிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் அல்லை, கந்தளாய், சீனித் தொழிற்சாலை குடியேற்றங்கள் ஏற்படும் வரையும் 3 வீதத்துக்கும் குறைவான சிங்களவர்களே அங்கு வாழ்ந்தார்கள் என்பதை சரத் வீரசேகர நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *