போதை ஒழிக்கப்பட வேண்டும் – வலிகாமம் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும் போதைப்பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பொலிசாருடன் இணைந்து செயற்படுவதற்கும் ஏகமனதாக இரு தீர்மானங்கள் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டதோடு சபையின் ஆளுகைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

நேற்றைய தினம் வலிதென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு அ.ஜெபநேசன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வலி தென்மேற்கு பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் எமது சமூகத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அண்மைக்காலமாக வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் போதைப்பொருளின் பாவனை அதிகரித்துள்ளதாக பத்திரிகைகள் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் ஊடாகவும் அறிய முடிகின்றது.

இதன் காரணத்தால் சமூகத்தில் குற்றச்செயல்களும், மருத்துவச்செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனை தடுப்பதற்கு எமது பகுதி பொலிஸ் நிலையங்களான மானிப்பாய் இளவாலை ஆகிய இரண்டு காவல் நிலைய பொலிஸா பொறுப்பதிகாரி களும் ஒரு விசேட பொறிமுறையினை உருவாக்கி சபையின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்றோம்.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாம் மீள்கின்ற போது எமது சமூகம் சமூகப்பிறழ்வான சமூகமாக சமூகமாக மாற்றம் அடைந்து காணப்படும் எனவே இப்போது இதனை தடுப்பதற்கு நாம் காவல்துறையினரின் உதவியினை நாடவேண்டிய இருப்பதனால் நாம் இப்பிரேரணையைச்சமர்பிக்கின்றோம் என தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் பிரேரணை ஒன்றை முன்வைத்தனர்.

இந்நிலையில் சபையின் உறுப்பினர் அ.திலீபனால் போதைப்பொருள் பாவனைக்கெதிரான தனிநபர் பிரேரணை ஒன்று பின்வருமாறு முன்வைக்கப்பட்டது. தற்போது இலங்கை தீவு முழுவதையும் போதை தனது கோரப்பிடியில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. போதைப்பொருள் பாவனையானது அந்தக் காலங்களில் வட புலத்தில் வீறுநடை போட்டு வருகிறது.

அந்தவரிசையில் யாழ் நகரம் மானிப்பாய் பகுதியில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 23 வயதுக்குட்பட்டவர் என்பது மன வேதனைக்குரிய விடயமாகும்

எமது எதிர்கால சந்ததியினை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடைய தலையாய கடமை என்பதை ஏற்று எமது வலிதென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் பின்வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஒன்றிணைவோம் .

  1. கிராமங்கள் தோறும் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  2. கிராமங்கள் தோறும் சாதாரண மற்றும் உயர் கல்விகளை நிறைவு செய்தவர்களுக்கு தொழில் வழிகாட்டல்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குதல்
  3. வீதிகளில் தேவையற்ற முறையில் ஒன்று கூடுபவர்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்கி தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்தல்.

4 போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை இனம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தலுக்கான உதவிகளை ஏற்படுத்தல்.

  1. புகைப் பொருள்கள் போதைப்பாக்குகள் போதையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை விற்பனையை எமது பிரதேசத்தில் படிப்படியாக தடை செய்தல்.

6 பாடசாலைகளை இலக்கு வைத்து புதிதாக ஆரம்பிக்கும் சிறிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தடை செய்தல் ஆகிய விடயங்களை உட்படுத்திய பிரேரணை ஒன்றை சபைக்கு முற்படுத்திய நிலையில்

சபையில் கருத்து தெரிவித்த சபையினுடைய தவிசாளர் அந்தோணிபிள்ளை ஜெபநேசன் குறித்த இரு தீர்மானங்களிற்கு எதுவித ஆட்சேபனைகளும் இன்றி தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாகவும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை பொறுப்பு வாய்ந்த நிலையில் மேற்கொள்ளும் எனவும், மேலும் சட்டவிரோத போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை பொலிசாருடன் இணைந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு சபை தயாராக இருப்பதாகவும் போதைப்பொருள் விற்பனைகள் இடம்பெறக்கூடிய கடைகளுக்கான உரிமங்கள் இரத்து செய்யபடுவதோடு, வலிதென்மேற்கின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமலுக்கு வரும் வகையில் இதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து சபையின் தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் சபையின் உறுப்பினர்கள் இணைந்து போதை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பிரதேச சபையும் இணைந்து செயற்படுவதாக தெரிவித்த மகஜரை இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை சந்தித்து வழங்கிய நிலையில் இரு பொலிஸ் நிலையங்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக இணக்கம் தெரிவித்த நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போதை பொருள் தொடர்பாக தகவல் அளிக்கவிரும்புபவர்கள் நேரடியாக தன்னை அணுகி தகவல் வழங்க முடியும் எனவும் தகலாளிகளின் தகவல் பேணப்படும் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *