பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றாலும் வேலையற்ற நிலை தொடர்கிறது- அரசாங்க அதிபர் கருத்து!

யாழ்.மாவட்டத்திலே இன்று மாபெரும் தொழிற்சந்தை ஒன்றை ஏற்பாடுகள் தற்போது அதனை நடாத்திக்கொண்டிருக்கிறோம்.நாங்கள் இந்த மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஊடாக கடந்த காலங்களிலும் ஒரு கிராமமாக வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருக்கின்ற அதேவேளையில் தொழில் தரகர்களுக்கும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் தளம் அமைத்துக்கொடுத்து வந்திருக்கின்றோம்.

இதற்கமைய இந்த வருடமும் மாபெரும் தொழிற்சந்தையாக இன்று செயற்படுத்தியிருக்கின்றோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழிலை தேடுவதற்குரிய அடிப்படை தகைமைகள் பெற்றுக்கொடுத்தலின்படி தொழிலை பெறுவதற்கும்,தொழில் தரகர்களை தொழில் தேடுபவர்களுடன் இணைத்தல் ஆகிய 2 விடயங்கள் இங்கு இடம்பெற இருக்கின்றன.

இளைஞர்கள் ,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இன்மை என்பது மிகவும் அதிகமாக காணப்படுகிறது.பட்டம் பெற்றவர்களுக்கான வேலையின்மை என்பதும் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கின்ற அதேவேளை உயர் தரத்தினை கற்காமல் கைவிட்டவர்களின் வேலை இன்மை என்பதும் அதிகமாக உள்ளது.

இதில் எங்கள் யாழ் .மாவட்டத்தில் பெண்களின் தொகை அதிகம். தனியார் துறையினர் வேலையாட்களை பெற்றுக்கொள்வதில் பலத்த இடர்களை எதிர்கொள்ளுகிறார்கள்.அதனுடன் வேலை தேடுபவர்களும் அதிகமாக இருக்கிறார்கள் .ஆனால் இவர்களை இணைப்பதற்கு தொழில் தகைமை பிரதானமான தடைக்கல்லாக இருக்கின்றது.

ஒரு தடவை கிடைக்கின்ற சந்தர்ப்பம் என்பது இன்னொரு தடவை கிடைப்பது என்பது மிக அரிது ,ஆகவே இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை மென்மேலும் பலப்படுத்தி விரிவாக்கி கொண்டு செல்வது தான் பொருத்தமானதாகும்.ஆகவே இந்த தளத்தினை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *