
கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என்று அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களில் சாப்பிடுவது என்பது பல நிறுவனங்களில் குறிப்பாக அமைச்சு கூட்டங்களின் போது நீண்ட காலமாக நடந்து வருகிறது.
தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என தெரிவித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்துமாறும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்னே நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டு, புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சபைக் கூட்டங்களுக்கு நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களில் இருந்து உணவு கொண்டுவருவதற்கு அதிகளவு பணம் செலவிடப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள வேளையில் இவ்வாறு பணத்தை வீணடிப்பது பொருத்தமானதல்ல எனவும் தெரிவித்தார்.