
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் என்னைக் களங்கப்படுத்தும் வகையில் ஒரு உரையாற்றியிருந்தார்.இதனை நான் முற்று முழுதாக மறுப்பதுடன் நான் அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிரதிச் செயலாளர் பொன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கடந்த 19 ஆம் திகதி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் என்னை தொடர்புபடுத்தி ஒரு உரையாற்றியிருந்தார்.என் வாழ்வு என்று என் போக்கில் சென்றுகொண்டிருக்கும் இந்த வேளையில் புதிதாக பிரச்சனைகளை தூண்ட வேண்டும் எதையாவது பாராளுமன்றில் பேச வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் புதிய கருத்துக்களை பரிமாறியிருக்கின்றார்.
இதனை நான் முற்றுமுழுதாக மறுப்பதுடன் இவை எனக்கல்ல அவருக்கே பொருந்தும் என்ற விடயத்தை கூறிக்கொள்கிறேன்.
கடந்த 4,5 வருடங்களுக்கு முன்னர் அவரின் செயலாளர் ” நீங்கள் பிள்ளையான் உடன் மோதுகிறீர்கள் ,எப்போதாவது பழி வாங்கியே தீருவோம்” என ஒரு காணிப்பிரச்சனையில் கூறியிருந்தார்.அந்த பழிவாங்கல் இப்போது இடம்பெறுகிறாதா ? என்று என்னை சிந்திக்க தூண்டுகிறது.
எங்கள் மட்டக்களப்பு மண் மதிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினரின் உறவினரின் காணி என்ற அடிப்படையில் அவற்றை ஆராய்ந்து அது உரியவரிடம் சென்றடைய வேண்டும் என்ற நீதியின் அடிப்படையில் நான் செயற்பட்டேன்.
இந்த பிரச்சினை மட்டக்களப்பு விஷேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டு வந்தன .இதன்போது சிவநேசன் சந்திரகாந்தனின் செயலாளர் என்னுடன் தொடர்புகொண்டு இதில் தலையிட வேண்டாம் என கூறியிருந்தார்.
1890 ஆம் ஆண்டிலே பிரித்தானிய அரசாங்கத்தினால் அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்ட காணி என கூறி நான் அவருக்கு தெளிவுபடுத்தியிருந்தேன். அவர் அப்போது கூறி விட்டு சென்றது இப்போது பொருந்துகிறதா ?என்று சிந்திக்க வேண்டிய சூழ்நிலைய ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் உள்ளன. சிவநேசன் சந்திர காந்தன் தனது சகோதரியின் கணவன் மாற்று வாசுகி ஹோட்டல் உரிமையாளரையும் பயன்படுத்தி இந்த காணி விற்பனை செய்யப்ட்டது.
இந்த விற்பனை செய்யப்பட்ட காணியின் உறுதி போலியானது என்று வழக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மோசடிக்கு பெயர் போன நபர் எப்படி என்னை களங்கப்படுத்தும் விதத்தில் பாராளுமன்றத்தில் ஆற்றியிருக்கின்ற உரையினை என்னால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றேன்.
உன்னால் முடிந்தால் என்னைப்பற்றிய விவாதங்களை காட்டுவதற்கு இந்த பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றேன்.
என்னை பற்றி அவதூறாக பேசப்பட்டிருக்கின்ற இந்த விடயம் முற்று முழுதாக தவறானது ,இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பிக்க இருக்கின்றேன்.
நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடியில் ,நாடு அபிவிருத்தி வேண்டும் என்ற நிலையில் ஒரு தனிப்பட்ட நோக்கத்திற்காக இவ்வாறு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மட்டக்களப்பு பிரதேசத்தை வழிப்படுத்த வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு செய்கின்ற செயல்களை நாம் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.என்பதனையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.
பிற செய்திகள்