அதிரடித் தீர்மானமொன்றை எடுக்கத் தயாராகும் ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சர்!

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க அரசியல் தீர்மானமொன்றை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசியல் களத்தில் பேச்சு எழுந்துள்ளதாக வாரப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவார் என்பது தொடர்பில் மினுவாங்கொடை பிரதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ரணதுங்க தற்போது தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அமைச்சருக்கு தெரிந்தே மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

சவால்களை ஏற்றுக்கொண்ட தலைவரை வைத்து எதிர்காலத்தில் அரசியல் செய்ய வேண்டுமா அல்லது அவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டுமா என கேட்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பின் முடிவுகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அமைச்சர் எதிர்காலத்தில் அரசியல் முடிவை எடுக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *