நவம்பர் 1ஆம் திகதி முதல் தனிநபர் வருமான வரி அறவிட தீர்மானம்

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்திற்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதற்கு பொறுப்பான அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அதன்படி மாத வருமானம் ரூ. 100,000 அல்லது அதற்கு மேல் வருமான வரி செலுத்த வேண்டியிருப்பதோடு உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% உயர்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *