<!–
வடக்கு மாகாணசபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் வட மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் “வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்” எனின் தொனிப்பொருளில் நடமாடும் சேவை இன்று ஆரம்பமானது.
இன்று (சனிக்கிழமை) கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபை வளாகத்தில் ஆரம்பித்த நடமாடும் சேவை மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவையின் ஊடாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் சகல நடவடிக்கையும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வட மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.