யாழில் தனது கையினை தானே வெட்டிய பாடசாலை மாணவன்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு மாணவர் ஒருவர் வழமையாக பாவிக்கும் பொருளை  பயிற்சிக் கொப்பிக்குள் வைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார்.

இது தொடர்பாக அனைவருக்கும் தெரிந்த பின்னர் அந்த மாணவன் தனது கைகளை வெட்டியதாக வலிகாமம் கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு மாணவன் ஒருவர் வழமையாக பயன்படுத்தும் பொருள் ஒன்றினை பயிற்சிக் கொப்பியினுள் மறைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார்.

இது தொடர்பில் வலயம், கோட்டம் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு விசாரணைக் குழுவினர் பாடசாலைக்கு வருகை தந்தவேளை குறித்த மாணவன் பயத்தினால் கூரிய ஆயுதத்தினைக் (பிளேட்) கொண்டு தனது கையினை வெட்டியுள்ளார்.

மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் தான் பாடசாலையில் இருக்கின்றார்கள். மிகுதி நேரம் வீட்டில்தான் இருக்கின்றார்கள். வீட்டில் இருந்து தான் இவ்வாறான தவறான பழக்கத்தினை பழகுகின்றார்கள்.
இது தெரியாமல் ஊடகங்கள் கல்வி வலயம் மற்றும் பாடசாலையினைக் குறிப்பிட்டு கண்டபடி செய்திகளை வெளியிடுகின்றன என ஊடகங்கள் மீது பாய்ந்தார்.

பதின்ம வயது மாணவர்கள் தான் போதைப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் வீட்டில் உள்ளவர்கள் அதிகம் அக்கறை எடுத்து  மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *