மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *