தீபாவளி முற்பணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் – ஜீவன் தகவல்!

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பான பிரச்சினை குறித்து தங்களது தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்படுமாயின் அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இரண்டு பெருந்தோட்ட நிறுவனங்களிலேயே இந்த பிரச்சினை காணப்படுவதாகவும் இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான நிகழ்ச்சியை சூரியனின் யுடியுப் தளத்தில் பார்வையிட முடியும்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *