இருளை நீக்கி வெளிச்சம் கொண்டு வருவதே தீபாவளி- தீபத்திருநாளின் மகத்துவம்!

தீபாவளி என்பது, தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குவதே. இத்திருநாளில் நம்மிடம் உள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை தூக்கி எறிவதோடு மட்டுமல்லாது, ஒரு தீய குணத்தையாவது எரித்து விட வேண்டும்.

நாம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, நம்மிடம் உள்ள கேட்ட பழக்கங்களான புகைத்தல், பொய் சொல்லுதல், குடிப்பழக்கம் போன்றவற்றில் ஒன்றையாவது விட்டுவிட வேண்டும்.

நமது மனதில் உள்ள இருளை நீக்கி வெளிச்சம் கொண்டு வருவது தான் தீபாவளி. வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதை இருட்டாக வைத்துக்கொள்ள கூடாது. தீபாவளியில் வெடிவெடிப்பது போல் மனதில் உள்ள தீய எண்ணங்களை சிதறடித்து விட வேண்டும் என்பதே ஆகும்.

இந்து சமயத்தினர் தீபாவளித் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *