கைதடியில் ஆயுர்வேத விழிப்புணர்வுக் கண்காட்சி!

யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு கைதடி சித்த போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தும் ஆயுர்வேத விழிப்புணர்வு கண்காட்சியானது நேற்றைய தினமும், இன்றைய தினமும் நடைபெற்றிருந்தது.

இந்த ஆயுர்வேத விழிப்புணர்வு கண்காட்சியானது கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பித்திருந்ததுடன் பி.ப 4.00 வரை இடம்பெற்றது.

அந்தவகையில் அங்கு நீரிழிவு,குருதி அமுக்கம் போன்ற ஒவ்வொரு நோய்க்கும் எந்த காய்கறிகள்,பழங்கள் உண்ண வேண்டும் என காய்கறிகள் ,பழங்கள் ஆகியன உள்ளடங்கலான படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பல்வேறுபட்ட மூலிகைச் செடிகள்இ ஆயுர்வேத மருந்துப்பொருட்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த கண்காட்சியினைப் பார்வையிடுவோருக்குஇ நோய்களை எவ்வாறு இனங்காண்பது தொடர்பாகவும் அதற்கு எவ்வாறான உணவுகளை உண்ண உட்கொள்ள வேண்டும் என்ற விளக்கங்களும் அளிக்கப்பட்டிருந்தன.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மருத்துவபீட மாணவி,

இந்திய துணைத் தூதரகமுத் கைதடி சித்த போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் இணைந்து அக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி ஒன்று ஒழுங்கமைத்து மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்று தற்சமயம் நிறைவடையும் நிலையில் உள்ளது.

கண்காட்சி வைப்பதற்கான நோக்கம் என்னவென்றால் இன்றைய காலத்தில் மக்கள் எப்படி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.எவ்வாறான உணவுப்பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

இலகுவாக எமது சூழலில் கிடைக்க கூடிய மூலிகையை பயன்படுத்தி எமக்கும் வரும் சிறிய நோயினை எவ்வாறு குணப்படுத்துவது போன்ற விடயங்களை இந்த கண்காட்சியில் விளக்கக் கூடிய வகையில் தெளிவுபடுத்துகின்றார்கள்.

எமக்கு ஏற்படும் நோயினை எவ்வாறு ஆயுள்வேதம் மூலம் குணப்படுத்தலாம் என்ற விளக்கவுரைகளை வழங்கியுள்ளார்கள்.அத்துடன் மூலிகைகளை பயன்படுத்தி எவ்வாறு பாணி மருந்துகளை தயாரிப்பது தொடர்பிலும் அதனைத் தயாரித்தும் காட்டி இருக்கிறார்கள் என்று அங்கு கலந்து கொண்ட மருத்துவபீட மாணவி மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *