நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை – மருத்துவர் ஹேமந்த ஹேரத்

நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் பற்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை மக்கள் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கொரோனா வைரஸ் முற்றாக நீங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *