இளவாலையில் 100 கிலோ கஞ்சா மீட்பு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாநிலம் கடற்கரையோரத்தில் இன்று அதிகாலை இராணுவ புலனாய்வு பிரிவினரால் நூறு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை வேளையில், கஞ்சா கடத்தபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய, மாதகல் மேற்கு லூரத்து மாதா ஆலயத்தின் பின்புறமாக உள்ள கடற்கரைக்கு சென்ற புலனாய்வு பிரிவினர் இயந்திர படகொன்றில் இருந்து 100 கிலோகிராம் கஞ்சாவினையும் இயந்திர படகொன்றினையும் கைப்பற்றிய நிலையில் சந்தேகநபர்கள் தப்பிசென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரால் கஞ்சா பொதிகள் கையளிக்கப்பட்டநிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இளவாலை பொலிசாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சான்று பொருட்கள் கையளிக்கப்பட்ட நிலையில் இளவாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *