தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் தயார்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று (ஞாயிற்க்கிழமை) மலையக பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியதை காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில் ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவை, டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று இந்நிலை காணப்பட்டதுடன் வியாபார நடவடிக்கைகளும் சூடுபிடித்திருந்தது.

இதேவேளை கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்களுக்காக பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்ததோடு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *