யாழில் மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

யாழ். சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இவ்வாறு அடுப்பு வெடித்துள்ளது.

வெடிப்பினால் அடுப்பு சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *