மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரிடம் !

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான குழுவின் அறிக்கை கிடைத்துள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இந்த யோசனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடா ளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை சமர்பிப்பதற்காக 8 பேர் கொண்ட இந்தக் குழு கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *