விராட் கோலி அதிரடி : 4 விக்கெட்களால் இந்திய அணி வெற்றி

உலகக் கிண்ண t-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி பாக்கிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நானாய் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில் பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் பாக்கிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மசூத் ஆட்டமிழக்கத்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இப்திகார் அகமது 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றிபெற்றது.

அவ்வணி சார்பாக விராட் கோலி ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *