ஈழத்து சிதம்பர் குருக்கள் தங்கும் இல்லத்தில் திருட்டு!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈழத்துச் சிதம்பரம்  ஆலயத்தின், குருக்கள் தங்கும் இல்லத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த பல பொருட்கள் கடத்த சில தினங்களுக்கு முன்னர் களவாடப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொறுப்பதிகாரி உபுல் செனதிரத்ன அவர்களின் தலைமையின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருடப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்திருந்த நிலையில் அந்த பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மீட்கப்பட்ட பொருட்களுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *