புத்தளம் கொழும்பு முகத்திடலில் பொலிஸ் காவலரன் திறப்பு

புத்தளம் கொழும்பு முகத்திடலில் பொலிஸ் காவலரன் இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் நகரசபைத் தலைவவர் ரபீகின் வேண்டுகோளுக்கு இனங்க பாலாவி இன்ஸி சிமெந்து தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த பொலிஸ் காவல் சாவடி நிர்மாணிக்கப்பட்டது.

புத்தளம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அமரபந்து, புத்தளம் நகரசபைத் தலைவர் எம்.எஸ்.எம் ரபீக் மற்றும் இன்ஸி தனியார் சிமெந்து நிறுவனத்தினர் ஒன்றினைந்து குறித்த பொலிஸ் காவலரனை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

குறித்த பகுதியில் பாரிய அளவில் போதைப் பொருள் பரிமாற்றங்கள் இடம்பெறுவதாகவும், இரவு நேரங்களில் குடிபோதையில் ஈடுபடுவதாகவும், இதனால் பாரிய சீர்கேடுகள் இடம்பெற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான விடயங்களை கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த பொலிஸ் காவலரன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *