நாட்டில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுள்ள அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்த ஜனாதிபதி அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல நம் தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *