வடமாகாணத்தில் குறிப்பாக யாழில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் இதனைத் தடுப்பதற்கு துறை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுத்து வரினும் இன்று வரை போதைப்பொருளினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்துள்ளார்.
யாழ். மருதடி – புத்தூர் மேற்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கல்வியில் திறமையாக திகழ்ந்த குறித்த இளைஞன், உயர் தரத்திற்கு தெரிவான பின்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பாடசாலையில் இணைந்துள்ளார்.
அங்கு அவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சான்று பெற்ற சிறுவர் பாடசாலையிலும் இளைஞன் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் கடந்த ஒரு மாத காலமாக ஹெரோய்னை நுகர முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிற செய்திகள்