மத்திய மலைநாட்டில் பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நீர் தேக்கங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு மஸ்கெலியா மவுசாகல நீர்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களுடன் இணைந்து நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மவுசாகல, கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான விமலசுரேந்திர காசல்ரீ மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் நீரேந்து பகுதியில் உள்ள அனைத்து நீர் ஓடைகள் மற்றும் காட்டாறு கள் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் மற்றும் பண்ணையாளர்கள் மிகவும் சிறமத்தின் மத்தியில் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *