வடக்கில் ‘சப்ரைஸ் கிப்ட்’ என்ற பெயரில் இடம்பெறும் மோசடி!

வவுனியாவில் உள்ள கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கிருபாகரன், தனது முகநூலில் ஒரு பதிவை இட்டுள்ளார், இப்பதிவிலிருந்து சில மோசடியாளர்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார்,

இது எமது மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் என்பதற்காக அந்த பதிவை இங்கு செய்தியாக்கியுள்ளோம்.

“இன்று எனது அலுவலகத்தில் தடுப்பூசி போட வந்த surprise gift ஐம்பது நாள் நாய்க்குட்டி வெளிநாட்டிலுள்ள மகன் தன் தாய்க்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஏதோ ஒரு surprise gift செய்பவர்கள் மூலம் surprise கொடுக்க எண்ணி இந்த நாய்க்குட்டியை ஒர்டர் செய்திருக்கிறார்.

அதன் விலை என்னை surprise செய்து விட்டது. என்ன விலை என தாயிடம் கேட்க, பெரிய விலை இல்லை 100.000/- என்றார். அதுவும் பெருமையுடன்.

அதிர்ந்து விட்டேன். வாழ்நாளில் பெரிய இன நாய்கள் வளர்க்கவில்லை. suppris gift செய்பவர்கள் இந்த நாய் ஒரிஜினல் ஜேர்மன் ஷெப்பேர்ட் direct import,imported blood line எனவும் இதன் விலை 100000/- தான் என சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.

தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் அந்த தாய் பட்டபாடு. நாய்க்குட்டி விற்பது தற்போது ஒரு மாபியா போல வந்து விட்டது.

தரம் குறைந்த நாய்களை பொய் சொல்லி அதிக விலைக்கு விற்கும் நபர்களை என்னவென்று சொல்வது.? (எல்லாரையும் சொல்லவில்லை. நல்ல நாய்களை நியாய விலைக்கு விற்பவர்களும் உள்ளனர்) அதுவும் இந்த வெளிநாட்டவர்களின் உள்ளூர் உறவினருக்கு சப்ரைஸ் கிப்ட் கொடுப்பவர்கள் வேற லெவல்” என அந்த வைத்தியர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

எனவே புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் தயவுசெய்து விழிப்பாக இருங்கள்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *