யாழில் தொடரும் கொடூரம் – தொன் கணக்கில் மாட்டு இறைச்சி மீட்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படுகிறது.இது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்கவில்லை என கால்நடை வளர்ப்பாளர்கள்,கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்கூடல் பகுதியில் பல மாடுகள் தொடர்ச்சியாக களவாடப்பட்ட நிலையில்.இன்று நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் மாடுகள் திருடிய சந்தேக நபர்கள்,முச்சக்கர வண்டியில் மாட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர கடந்த சில நாட்களுக்குள் 100 கிலோகிராமுக்கும் அதிகமான மாட்டு இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் நேற்றைய தினம் புளியங்கூடல் பகுதியில் ,மாடு ஒன்று இறைச்சியாக்கப்பட்டு.அதன் கழிவுகள் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.இதேவேளை கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்ட இரண்டு மாடுகள் பாதுகாப்பாக அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இன்று தீபாவளி தினம் என்பதால்,நேற்றைய தினம் பல மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *