சூடானில் பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220ஆக உயர்வு!

தெற்கு சூடானில் நடந்த பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220 ஆக உயர்ந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் இன வன்முறையின் மிக மோசமான அத்தியாயங்களில் ஒன்றாகும்.

எத்தியோப்பியா மற்றும் தெற்கு சூடானின் எல்லையான புளூ நைல் மாகாணத்தில் நிலப்பிரச்சினை காரணமாக இந்த மாதம் சண்டை மூண்டது.

இது பெர்டா சமூகத்திற்கு எதிராக மேற்கு ஆபிரிக்கா முழுவதும் பிறப்பிடமாகக் கொண்ட ஹவுசா மக்களால் தூண்டப்பட்டது.

எத்தியோப்பியாவின் எல்லையில் உள்ள வாட் அல்-மஹி நகரில் புதன் மற்றும் வியாழன் அன்று பதற்றம் அதிகரித்தது. உள்நாட்டு மோதல்கள் மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் நாட்டின் நிலைமையை இது மோசமாக்கியது.

பெரிய எண்ணிக்கையிலான உடல்கள் மற்றும் டசன் கணக்கான காயமடைந்தவர்களைக் கணக்கிடுவது உட்பட, நிலைமையை மதிப்பிடுவதற்காக, முதல் மனிதாபிமான மற்றும் மருத்துவத் தொடரணி சனிக்கிழமை பிற்பகுதியில் வாட் அல்-மஹியை அடைந்ததாக ப்ளூ நைல் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் ஃபாத் அர்ரஹ்மான் பகீத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *