இந்துக்கள் கொண்டாடும் முக்கியம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் தீபாவளி திருநாள் இன்றையதினம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று விருந்துபசாரங்களில் ஈடுபடுவதும் பண்டைய காலம் தொட்டு வந்த மரபு.
இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டு்ள்ள சீரற்ற காலநிலையையடுத்து பல்வேற பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகின்றது.
இதேவேளை குறிப்பாக இன்றையதினம் காலைமுதல் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
அதன்காரணமாக மக்களது தீபாவளி கொண்டாட்டம் சோபையிழந்து காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பிற செய்திகள்