வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் பெருமளவான இலங்கைப் பெண்கள்!

வேலைவாய்ப்புக்காக சென்ற 80 பெண்கள் டுபாயில் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன பெண்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாகவே டுபாய்க்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் 50 பெண்கள் டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் சிக்கியிருப்பதாகவும் மீதமுள்ள பெண்கள் ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் டுபாயில் உள்ள இலங்கைத் தூதரக ஜெனரல் நலின்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டுபாய்க்கு பணி நிமித்தம் காரணமாக சென்றவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தவிக்கும் பெண்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துடன் இணைந்து செயற்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *