யாழில் பூசகரின் தில்லாலங்கடி வேலையால் ஆலய நிர்வாகத்தினால் பூசகர் வெளியேற்றம்!

தென்மராட்சி பகுதியில் உள்ள கோவிலில் வீட்டில் செய்த பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவிலில் பயன்படுத்தியதற்காக பூசகர் ஒருவர் கோவில் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று அவசர அவசரமாக கோயிலுக்குள் நுழைந்து பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றைப் படைத்து வழிபட்டார்.

பூசாரியின் நடத்தையில் சந்தேகமடைந்த பக்தர்கள் கோவில் மடத்தை திறந்துள்ளனர். இந்த நேரத்தில் அங்கு சமையல் செய்யப்படவில்லை.

இதையடுத்து, பூசாரியை அழைத்து விசாரித்தபோது, ​​வீட்டுச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கொண்டு வந்ததை ஒப்புக்கொண்ட பூசாரியை கோயில் நிர்வாகத்தினர் வெளியேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *